(எம்.மனோசித்ரா)
உரத்திற்கு பதிலாக, அதனைக் கொள்வனவு செய்வதற்கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான செயற்திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர்கள் , உரம் தொடர்பில் செயற்படும் மேலதிக பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தக் கலந்துரையாடலின் போது, விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரத்தை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. குறிப்பாக யூரியா தேவையானளவு முழுமையாகக் கிடைக்கப் பெற்றுள்ளது. கிடைக்கப் பெற்றுள்ள உரத்தை முறையாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது. அதேபோன்று உர விநியோகம் தொடர்பில் விவசாயிகளால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.
மேலும் அடுத்த வருடம் முதல் உரத்தை வழங்குவதற்கு பதிலாக, அதனைக் கொள்வனவு செய்வதற்கான பணத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்கான யோசனை தொடர்பிலும் இதன் போது தீர்க்கமாக அவதானம் செலுத்தப்பட்டது. இதன் பலன் நேரடிhக விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதே ஜனாதிபதியினுடைய நிலைப்பாடுமாகும். இது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM