கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கல் விழாவும், கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண ரீதியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதனூடாக தெரிவுசெய்யப்பட்ட இளம், மூத்த கலைஞர்களுக்கு 'வித்தகர்' மற்றும் 'இளம் கலைஞர்' விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர், தோப்பூர் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி இளம் கலைஞர் (ஊடகத்துறை) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், பண்பாட்டுப் பேரணியும் கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும் ஏனைய அதிதிகளாக திருகோணமலை மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM