இஸ்லாமிய சிந்தனை என்ற முத்திங்கள் ஆய்வுச் சஞ்சிகையில் சுமார் 40 வருடங்களாக மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் தொடராக எழுதிய சிந்தனைகளை தொகுத்து மருதமுனை ஆசிரியர் நெளபாஸ் ஜலால்தீன் எழுதிய 'கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் சிந்தனைகள்' எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வு அம்பாறை மாவட்ட றாபிததுன் நளீமிய்யீன் ஏற்பாட்டில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் அதன் அம்பாறை மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பேருவளை ஜாமிய்யா நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி உஸ்தாத் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது நூல் ஆய்வுரையை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடாதிபதி பேராசிரியர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம். மஸாஹிர் நிகழ்த்தினார்.
நூலின் முதல் பிரதியை மருதமுனை ஜாஹி வீவர்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் அல்ஹாஜ் டாக்டர் எம்.ஐ. உபைதுர் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.
மேலும், ஜாமிய்யா நளீமிய்யா இஸ்லாமிய கற்கைகள் பீடாதிபதி தனது உரையில், இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் பேருவளை ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் வகிபங்கு பற்றியும், மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் வாழ்வியல் தடயங்கள், அவரது சிந்தனைகள், முஸ்லிம் சமூகம் சார்ந்த அவரது எதிர்பார்ப்புகளை பற்றியும் கருத்துக்களை பகர்ந்தார்.
இந்நிகழ்வினை அஷ்ஷெய்க் கே.எல். நைஸர், அஷ்ஷெய்க் றாபி எஸ். மப்றாஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
மேலும், வரலாற்றில் ஓர் ஏடு புகழ் ஏ.சி.ஏ.எம். புஹாரி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஜாமிய்யா நளீமிய்யா கலாபீடத்தின் பழைய மாணவர்களான றாபிததுன் நளீமிய்யீன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM