மலேஷியாவின் விமாமொன்று 2014 ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியானமை தொடர்பான வழக்கில் 3 நபர்களுக்கு நெதர்லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மலேஷிய எயார்லைன்ஸின் எம்.எச்17 விமானம் 2014 ஆம் ஆண்டு யுக்ரைனுக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது வீழ்ந்து நொறுங்கியது. அவ்விமானம் ஏவுகணையினால் சுட்டு வீழ்த்தப்பட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
நெதர்லாந்தின் ஆம்;ஸ்டர்டாம் நகரிலிருந்து மலேஷியாவின் கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த மேற்படி போயிங் 777 ரக இவ்விமானம் யுக்ரைனுக்கு மேலாக 33,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது சுட்டுவீழ்த்தப்பட்டது.
இதனால் விமானத்திலிருந்த 298 பேரும் உயிரிழந்தனர். 196 தெர்லாந்து பிரஜைகள், 43 மலேஷிய பிரஜைகள், 38 அவுஸ்திரேலிய பிரஜைகள் உட்பட 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்களில் அடங்கியிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் ரஷ்யர்களான ஐகோர் கீர்கின், சேர்ஜி டபின்ஸ்கி, யுக்ரைனியரான லினோனிட் கார்சென்கோ ஆகியோர் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இம்மூவருக்கும் ஆயுள்தண்டனை விதித்து நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமலேயே இவ்வழக்கு விசாரணைகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கீர்கினும், கார்சென்கோவும் ஏவுகணையை ஏவாவிட்டாலும், அதை ரஷ்யாவிலுள்ள இராணுவத் தளமொன்றிலிருந்து குறித்த இடத்துக்கு கொண்டுவந்தமைக்கு பொறுப்பாளிகள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
குற்றம்சுமத்தப்பட் மற்றொருவரான ஒலேக் புலாடோவுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லைஎன நீதிபதிகள் தெரிவித்து அவரை விடுதலை செய்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM