சக்கரக்கதிரையின் சக்கரங்களுக்குள் ஒழித்துவை போதைப்பொருளை கடத்த முயன்ற பெண்ணொருர் அமெரிக்காவின் நியூ யோர்க் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 28 இறாத்தல் கொக்கேயின் போதைப்பொருளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் அதன் பெறுமதி 450000 டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொமினிக்கன் குடியரசிலிருந்து நியூ யோர்க் ஜோன் எவ் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை அப்பெண் வந்தடைந்தார்.
விமான நிலையத்துக்குள் அவர் பயன்படுத்திய சக்கரக்கதிரையின் அசாதாரணத் தன்மையை உணர்ந்த அதிகாரிகள், அதன் சக்கரங்களை எக்ஸ் றே பரிசோனைக்கு உட்படுத்தினர்.
அதற்குள் வெள்ளை நிறமான தூள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பரிசோதித்தபோது அது கொகேய்ன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டொனிமின்கன் குடியரசு பிரஜையான எமேலின்டா பௌலினோ டி ரிவாஸ் எனும் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM