சக்கரக்கதிரையின் சக்கரங்களில் ஒளித்து போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் கைது 

Published By: Sethu

17 Nov, 2022 | 04:05 PM
image

சக்கரக்கதிரையின் சக்கரங்களுக்குள் ஒழித்துவை போதைப்பொருளை கடத்த முயன்ற பெண்ணொருர் அமெரிக்காவின் நியூ யோர்க் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 28 இறாத்தல் கொக்கேயின் போதைப்பொருளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர் அதன் பெறுமதி 450000 டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டொமினிக்கன் குடியரசிலிருந்து நியூ யோர்க் ஜோன் எவ் கென்னடி சர்வதேச விமான நிலையத்தை அப்பெண் வந்தடைந்தார்.

விமான நிலையத்துக்குள் அவர் பயன்படுத்திய சக்கரக்கதிரையின் அசாதாரணத் தன்மையை உணர்ந்த அதிகாரிகள், அதன் சக்கரங்களை எக்ஸ் றே பரிசோனைக்கு உட்படுத்தினர். 

அதற்குள் வெள்ளை நிறமான தூள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பரிசோதித்தபோது அது கொகேய்ன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டொனிமின்கன் குடியரசு பிரஜையான எமேலின்டா பௌலினோ டி ரிவாஸ் எனும் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right