(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விதிமுறைகள் அரசியலமைப்பில் இருக்கும் நிலையில், அதனை இல்லை என தெரிவித்து பிரதமர் மக்களை பிழையாக வழிநடத்த முற்படுகின்றார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களினால் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டால், அந்த நிமிடமே பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.
அதனால் மக்களை பிழையாக வழிடந்த வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொள்கின்றாேம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (17) விசேட கூற்றொன்றை முன்வைத்து, பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என பிரதமர் நேற்று (நவ.16)தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பில் எந்த முறைமையும் இல்லை என பிரதமர் சபையில் தெரிவித்திருக்கின்றார்.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பில் விதிமுறைகள் இருக்கின்றன. அதனை புரிந்துகொள்ளாமலே பிரதமர் தெரிவித்திருக்கின்றார்.
அரசியலமைப்பின் 70 (1) அ. பிரிவு மற்றும் ஏ பந்திக்கு அமைய, பாராளுமன்றத்தின் பிரேரணை ஒன்றின் அடிப்படையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முடியுமாகின்றது.
அதனை எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதிக்கு செய்ய முடியும். அதேபோன்று அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டரை வருடங்களுக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.
அதனால் அமெரிக்க முறை இலங்கையில் இல்லை என எமது உறுப்பினர் ஹர்ஷடி சில்வாவை பிரதமர் அவமதித்திருந்தார்.
அதனால் மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என பிரதமரை கேட்டுக்கொள்கின்றேன். நாங்கள் நாட்டு மக்களை பிழையாக வழிடத்த எந்த சந்தர்ப்பத்திலும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை.
அத்துடன் உரிய காலத்துக்கு தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை சந்தித்தபோது, எமக்கு உறுதியளித்தார்.
ஆனால் அரசாங்கம் ஏதாவது தடைகளை ஏற்படுத்தாமல் இருந்தால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறும். பைத்தியம் பிடித்த நாயை குளிப்பாட்ட எடுத்துச்செல்வது போலவே, தேர்தல் நடத்துமாறு தெரிவித்தால் அரசாங்கம் நெலிந்து குழைந்து செயற்படுகின்றது.
அதனால் அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பதாக இருந்தால், முதுகெலும்பு இருக்குமானால் தடைகளை ஏற்படுத்தாமல் உரிய காலத்துக்கு தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM