'பொன்னியின் செல்வன்' படத்தின் திரைக்கதைக்கு பங்களிப்பளித்த எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'ரத்தசாட்சி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ரஃபிக் இஸ்மாயில் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் 'ரத்தசாட்சி'.
இதில் நடிகர் கன்னிகா ரவி முதன்முறை கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஆர். ஜெகதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு ஜாவித் ரியாஸ் இசையமைத்திருக்கிறார்.
ஆஹா டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை மகிழ் மன்றம் எனும் பட நிறுவனம் சார்பில் அனிதா மகேந்திரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக்கில் யானை மீது அமர்ந்து நாயகன் உலா வருவது போலும், பின்னணியில் நிலங்கள், வயல்கள் தீப்பிடித்திருப்பது போன்றும் அமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM