போலந்தில் எப்படி ஏவுகணை விழுந்து வெடித்தது என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாலியில் இடம்பெறும் ஜி20 உச்சிமாநாட்டின் போது உலக தலைவர்களை சந்தித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஏவுகணைகள் குறித்த விசாரணைகளிற்கு தனது முழு ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஸ்யாவின் கண்மூடித்தனமான ஆபத்தான படை பிரயோகத்தை கண்டித்துள்ள அன்டனி அல்பெனிஸ் கொல்லப்பட்ட போலந்து நாட்டவர்களின் குடும்பங்களிற்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை தான் போலந்து தூதுவருடன் பேசியுள்ளதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் போலந்து மக்கள் அமைதியுடனும் புத்தி;சாலித்தனத்துடனும் செயற்படவேண்டும் என போலந்து பிரதமர் விடுத்த வேண்டுகோளை பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM