(லியோ நிரோஷ தர்ஷன்)
இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு தொடர்பு மற்றும் பாதுகாப்பு புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தையினை இலங்கை பிரான்சுடன் முன்னெடுத்துள்ளது. இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரான்ஸ் கூட்டு கடற்படையின் கட்டளை அதிகாரி ரியர் எட்மிரல் டிடியர் பெலட்டோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுடனான சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் இரு நாட்டு பாதுகாப்பு சார்ந்த உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன் போது பரந்தளவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக கடல் பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் உலக நாடுகள் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பிரான்சும் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டி பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றது.
சமுத்திர பாதுகாப்பு தொடர்பான காலி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டிடியர் பெலட்டோன் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளமை குறிப்pபிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM