ஆசிரியை T. பிரவாகினியின் 'சாயம்' வரலாற்றின் மீதான கழிவிரக்கம் கலைக்கூடம் திறப்பு நிகழ்வும், காலத்தின் தேவை கருதிய சிறப்புரை நிகழ்வும் திருகோணமலை செல்லம்மா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (நவ 12) காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்சன் பிரதம விருந்தினராக பங்கேற்றதுடன், சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வலயக்கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் மற்றும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக்கல்வி பணிப்பாளர் R.நிமலரஞ்சன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இக்கலைக்கூடம் செல்லையா தர்மலிங்கம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தனது படைப்பின் உள்ளீட்டு எண்ணக்கருவை வண்ணமூட்டிய விளக்க உரையாக ஆசிரியை T.பிரவாகினி தொகுத்து வழங்கியதை தொடர்ந்து வைத்தியர்களான த.ஜீவராஜ், அ.சதீஸ்குமார், இலக்கிய ஆர்வலர் காளிராசா செந்தூரன், கவிஞர் தில்லைநாதன் பவித்திரன் ஆகியோர் அறிமுக உரைகளை நிகழ்த்தினர்.
இதன்போது தொன்மை வாய்ந்த கோணேஸ்வரம் ஆலயத்தின் பண்டைய வரலாற்றை சித்திரிக்கும் ஓவிய கைவண்ணம், தமிழர் தொல்லியல் வரலாற்றுப் பெருமை கூறும் தேவரடியாரின் தோற்றம், தேர், கும்பம், கரகம் முதலான காட்சிகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள், கொட்டியாரப்பற்றின் (மூதூர்) பெருமை கூறும் கொட்டியார கோட்டை, நொக்ஸ் புளியமரத்தின் வரலாறு, மத்தள மலை உள்ளடங்கலான வாழ்வியல் சுவடுகளை சுமந்து நிற்கும் வண்ணக் காட்சிகளை இணைத்தபடி நிகழ்வுகள் சிறப்புற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM