ஆசிய கண்டத்தில் விதிமுறைகளுக்கு முரணாக பந்துவீசுபவர்கள் அதிகமிருந்து வருகின்றார்களென தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் நடுவர் டரல் ஹேயார் அவ்வாறு பந்து வீசுவதற்கு ஊக்குவிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் நான் முறைகேடான பந்துவீச்சுக்கு எதிராக இருந்துள்ளேன். விளையாட்டை காப்பாற்ற கடுமையாக போராடினேன். இந்திய வீரர் ஹர்பஜன்சிங், இன்னும் முறைகேடாக தான் பந்துவீசுகிறார். துஸ்ரா பந்துவீச்சில் மட்டும் முறைகேடாக வீசவில்லை. சாதாரணமாக வீசும்போதும் கூட முறைகேடாக தான் இருக்கிறது. இதுபோன்று பந்து வீசுபவர்கள் ஆசிய கண்டத்தில் அதிகமிருந்து வருகிறார்கள். அதுபோல் பந்துவீச ஊக்குவிக்கப்படுகிறார்கள். அது சரி செய்யப்படுவதில்லை.
நடுவர்களின் பணி கிரிக்கெட் விதிகளை காப்பதே. யாராவது முறைகேடாக பந்துவீசினால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவர்களின் கண்கள் கட்டப்பட்டால் இந்த பிரச்சினை அப்படியே தான் இருக்கும். தீர்வு கிடையாது என்றார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் டரல் ஹேயார் கிரிக்கெட்டில் பரபரப்புகளை உருவாக்கியதோடு 1992ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை 78 டெஸ்ட் போட்டிக்கு நடுவராக பணியாற்றியுள்ளார்.
1995 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திபதி மெல்பேர்னில் நடந்த அவுஸ்திரேலியா இலங்கை டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் முறைகேடாக பந்து வீசுவதாக 7 பந்துகளுக்கு முறையற்ற பந்தென தீர்ப் பளித்தார். இதனால் சர்ச் சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM