பாகிஸ்தானின் வட மேற்கு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் சமீப காலமாக இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள மர்தான் மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை (நவ 10) இரவு பயங்கரவாத எதிர்ப்புப் படை பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த ஒரு பயங்கரவாதி கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரியொருவரை நோக்கி துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அப்பகுதியில் பொலிஸார் சூழ்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். அதன்போது குறித்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பயங்கரவாதி பொலிஸாரால் தேடப்பட்டுவந்த பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத இயக்கத்தின் தளபதி மெஹ்முத் என்கிற ஒபைத் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சுட்டுக் கொல்லப்பட்ட ஒபைத் முன்னதாக பதிவு செய்யப்பட்ட மர்தான் மாவட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கொலை உட்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களோடு தொடர்புடையவர்; அவரது தலைக்கு கைபர் பக்துங்வா மாகாண அரசு 50 இலட்சம் ரூபா பரிசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM