ஜனாதிபதி மாளிகை அறையிலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம்

Published By: Digital Desk 3

11 Nov, 2022 | 03:05 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை மையப்படுத்திய விவகாரத்தில், மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகிய இருவரினதும் குறைப்பாடுகள் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டை நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (11) ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறியமை உளிட்ட கடந்த ஜூலை 9 ஆம் திகதி நடந்த சம்பவங்கள் தொடர்பில் இடம்பெறும்  விசாரணைகள் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு   இதனை  கோட்டை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

அதன்படி, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தவறுகள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்கும் பொருட்டு பரிந்துரைகளை அரச சேவை ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ளதாக குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையின் 4 ஆம் இலக்க அறையிலிருந்து போராட்டக் காரர்கள் கண்டெடுத்த கோடிக்கணக்கான பணத் தொகையை, அரசியல்வாதி ஒருவருக்கு கையளிக்க, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சாகர லியனகேவுக்கு கட்டளையிட்டதாக கூறப்படும்  நிலையில், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையிலேயே இந்த விடயம் நீதிமன்றுக்கு  அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58