(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
அதிகமான மாணவர்கள் முறையான ஆகாரம் இல்லாமல், கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதனால் எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ 11) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாடசாலை மாணவர்களில் அதிகமானோர் முறையான ஆகாரம் பெற்றுக்கொள்ளாமல் கல்வி நடவடிக்கையில் ஈடுபடுவதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
அதனால் அரசாங்கம் அடுத்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 43 இலட்சம் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசாங்கம் அரச செலவை பாரியளவில் அதிகரித்திருக்கிறது. அந்த செலவுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் மாணவர்களின் போஷாக்குத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அவர்களின் போஷாக்கு நிலையை கணிப்பதற்கும் காலம் வந்துள்ளது. அதனால் விஞ்ஞான ரீதியான கணிப்பொன்றை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹபொல புலமைப்பரிசில் வழங்குவதிலும் தாமத நிலை நிலவி வருவதாக அறியக்கிடைத்தது. அது தொடர்பாகவும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM