(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)
நாட்டில் வறுமை நிலை அதிகரித்துள்ளதால் ஆகாரம் பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் வீதம் ஏனைய காலங்களைவிட அதிகரித்துள்ளது.
அதனால் மாணவர்களுக்கு வழங்கப்படும் பகல் உணவை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவித்த கருத்து பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் இருக்கும் மொத்த அரச பல்கலைக்கழங்களில் ஒரு இலட்சத்தி 40ஆயிரம் மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் ஒருஇலட்சத்தி 10ஆயிரம் மாணவர்களுக்கு மகபொல உதவித்தொகையாக 5500ருபா வழங்கப்படுகின்றது.
அதனுடன் மேலதிகமாக 500ரூபா வழங்கப்படுகின்றது. நான் இந்த பதவிக்கு வருவதற்கு முன்னர் 3மாதங்கள் நிலுவை இருந்தது.
ஆனால் அந்த நிலுவை முடிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கி வருகின்றோம். இது தொடர்பாக திறைசேரி, நிதி அமைச்சுடன் நான் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
அத்துடன் மாணவர்களின் போஷாக்கு தொடர்பாக கல்வி அமைச்சில் தனிப்பிரிவு இருக்கின்றது. அதன் பிரகாரம் தொகுதி, வலயம் மற்றும் மாகாண மட்டத்தில் மாதாந்தம் மாணவர்களின் போஷாக்கு தொடர்பான அறிக்கை பெற்று வருகின்றோம்.
நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறுமை நிலை அதிகரிப்பு காரணமாக ஏனைய காலங்களைவிட மாணவர்களுக்கு ஆகாரம் கிடைக்காத நிலையே இருக்கின்றது.
அத்துடன் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதற்காக வருடாந்தம் 4பில்லியன் ருபா ஒதுக்கப்படுகின்றது.
அதில் மாணவர் ஒருவருக்கு 60 ரூபாவரை செலவிட முடியும். அந்த தொகையை 75ரூபாவரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அதேநேரம் இந்த தொகைக்கு மேலதிகமாக ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனாவின் உதவி மற்றும் ஏனைய நன்கொடைகள் ஊடாக மொத்தமாக 11 இலட்சம் பேருக்கு பகல் உணவு வழங்கி வருகின்றோம். இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
அத்துடன் இதுதொடர்பாக தனி நிதியம் அமைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அதுதொடர்பாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM