யாழ்ப்பாணம் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (நவ 10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணியொன்று அதன் உரிமையாளர்களான இறந்துவிட்ட தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் உரிமை மாற்றம் செய்யப்பட்டது.
அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுத்து, சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
எனினும், பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது இந்த மோசடி வழக்கு மீண்டும் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ 4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது தமது புலன் விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையை பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது.
மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் ஏன் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
இதேவேளை சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்புக்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.
சந்தேக நபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கட்டளையொன்றை வழங்கிய மேலதிக நீதிவான், இவ்வழக்கு நடவடிக்கைகளின் பதிவானது யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை வெள்ளிக்கிழமை மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி, மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி நேற்று வியாழக்கிழமை (நவ 10) கைதுசெய்யப்பட்டார்.
அத்துடன் இந்த வழக்கோடு தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராக கடமையாற்றி கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் சிக்கி பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.
இவ்விரு சந்தேக நபர்களும் இன்று வெள்ளிக்கிழமை (நவ 11) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM