இங்கிலாந்துடனான அரையிறுதி போட்டி தோல்வியின் பின்னர் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா இந்திய அணி பந்து வீசிய விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது
இன்றைய போட்டி முடிவு குறித்து நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,இறுதி ஓவர்களில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம்- 168 ஓட்டங்களை பெற்றோம் என நான் கருதுகின்றேன்.
ஆனால் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை,
அணியொன்று 16 ஓவர்களில் போட்டியில் வெற்றிபெறக்கூடிய ஆடுகளம் இல்லை இது.இன்று பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை.
நொக்அவுட் போட்டிகள் என்பது அழுத்தமான சூழ்நிலைகளை சிறப்பாக கையாள்வது தொடர்பானது.
அழுத்தங்களை கையாள்வது எப்படி என எவருக்கும் கற்றுக்கொடுக்க முடியாது.
ஐபிஎல்லில் நெருக்கடி மிகுந்த பிளேஒவ் போட்டிகளில் இவர்களில் விளையாடும்போது அவர்களால் அந்த அழுத்தங்களை கையாள முடிகின்றது.
நாங்கள் பந்து வீச ஆரம்பித்த விதம் சிறப்பானதாக காணப்படவில்லை நாங்கள் சிறிது பதட்டமாக காணப்பட்டோம்.
இதேவேளை எதிரணியினருக்கும் உரிய பாராட்டை வழங்கவேண்டும்- அவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள்.
புவனேஸ்வர்குமார் முதல் ஓவரை வீசியவேளை பந்து ஸ்விங் ஆகவில்லை - அவர் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யவில்லை.
நாங்கள் ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக வைத்திருக்க விரும்பினோம்,நாங்கள் இருக்கமாக பந்து வீசியும் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றிருந்தால் அது பரவாயில்லை ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை.என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM