பெருந்தோட்ட காணிகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து, கண்டி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தெல்தோட்டை லிட்டில்வெளி பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ‘எமது காணியை அபகரிக்காதே’ ‘எமது வாழும் உரிமையை பறிக்காதே’ ‘தனியாருக்கு தோட்டக் காணிகளை விற்பனை செய்வதை உடன் நிறுத்து’ என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டம் முடிவடைந்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த, சமூக வலுவூட்ல் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
இதன் போது இவ்விடயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். எக் காரணம் கொண்டும் அரச காணிகளை தனியாருக்கு வழங்கப்படமாட்டாது. அது உடன் நிறுத்தப்படும் என உறுதி வழங்கினார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்தை விட்டு விலகிச் சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM