கட்டானை பிரதேசத்தில் இரட்டை மாடிகளைக்கொண்ட சொகுசு வீடொன்றில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்தை நீர்கொழும்பு பொலிஸார் சுற்றி வளைத்து பெண் ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு பெரும் தொகையான மதுபானத்தையும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கட்டானை, கொந்தகே சந்தி, லூர்து மாவத்தையில் இந்த சட்ட விரோத தயாரிப்பு நிலையம் இயங்கி வந்துள்ளது.
பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது கசிப்பு தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்துள்ளன.
20 இலட்சம் ரூபா பெறுமதியான கோடா மதுபானங்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கட்டானை கொன்கொஸ் சந்தியைச் சேர்ந்த பெட்ரீஸியா பெரேரா, தெமங் சந்தியைச் சேர்ந்த அக்கலங்க சில்வா ஆகியோரே கைது செய்யப்பட்ட சநதேக நபர்களாவர்.
சந்தேக நபர்கள் இருவரும் சொகுசு வீடுகள் மூன்றை அதிக தொகைக்கு வாடகைக்கு பெற்று அதில் ஒரு வீட்டில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த வீடுகள் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சொந்தமானதாகும்.
சந்தேக நபர்களை மன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM