கே .குமணன்
பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உல உணவுத் திட்டத்தின் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முல்லைத்தீவு நகரில் இன்று (08) நடைபெற்றுள்ளது.
இலங்கையில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் உலக உணவுத்திட்டத்தினால் முல்லைத்தீவு மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணமும்,நிவாரணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 3083 குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பணம் வெஸ்ரன் யூனியன் ஊடாக முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 9ஆயிராத்தி 577 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி வங்கி ஊடாக தற்போது வழங்கப்பட்டு வருகின்றது
புள்ளிவிபர ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு 60 நாட்களுக்கு தேவையான உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.50 கிலோ அரிசி,20 லிலோ பருப்பு,5 லீற்றர் உணவு எண்ணெய் என்பன இதன்போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவின் கீழும் 19 ஆயிரத்தி 890 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.
முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிழையில் வைத்து தவைர் ந.புகழ்வேந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்காக இணைப்பாளர்,மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதியினை வழங்கி வைத்துள்ளார்கள்.
தொடர்ந்து ஏனைய பிரதேசங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்டவுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM