(இராஜதுரை ஹஷான்)
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நிலையான அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்வார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள். அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினை பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. அரசாங்கத்தின் உள்ளகப் பிரச்சினைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்குவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் மறுக்கப்படுவதால் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நிலையான அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் மறுபுறம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைகளினால் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும். வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியலில் பல திருப்புமுனையான சம்பவங்கள் இடம்பெறும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கானல் நீராக காணப்படுகிறது.கடன் மறுசீரமைப்பு தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட நிபந்தனைகளை அரசாங்கம் இதுவரை செயல்படுத்தவில்லை.ஊழல் மோசடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச கொடுக்கல் வாங்கல்களில் மோசடி தவிர்க்கப்படவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM