சர்வதேச வாடிக்கையாளர் சேவை வாரம் இந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டது.
DFCC வங்கி இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையிலும், வங்கியின் முக்கியமான விழுமியங்களில் ஒன்றான, சேவை மற்றும் வாடிக்கையாளர் மையத்தன்மையைக் கொண்டாடும் முகமாகவும் வலையமைப்பு மட்டத்திலான தொடர் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
2022 ஒக்டோபர் 7 அன்று DFCC வங்கி வாடிக்கையாளர் சேவை அமர்வுடன் இந்த வாரம் முடிவடைந்தது. DFCC வங்கி, வாடிக்கையாளர் சேவை வாரம் 2022 ஐப் பயன்படுத்தி, உட்தரப்பு மற்றும் வெளித்தரப்பு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட பல்வேறு செயல்பாடுகள் மூலம் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சிந்தனைகள் மற்றும் கொள்கைகளை மேலும் புகுத்துவதற்கான வாய்ப்பினை முன்னெடுத்தது.
வாடிக்கையாளர் சேவையில் அதன் நட்சத்திர பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்கள் மற்றும் தலைசிறந்த வாடிக்கையாளர் அனுபவங்களை வழங்கிய பங்களிப்பாளர்களைக் கொண்டாடவும் வங்கி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தியது.
இடமிருந்து வலமாக நிற்பவர்கள் - டயலொக் அக்சிஆட்டா பிஎல்சியின் குழும பிரதான வாடிக்கையாளர் சேவை அதிகாரியான சன்ட்ரா டி சொய்சா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நிறைவேற்று துணைத் தலைமை அதிகாரி, பிரதம மக்கள் அதிகாரி, நிலைபேற்றியல், நிறுவன இடம் முகாமைத்துவம் மற்றும் குழும முயற்சிகளுக்கான தலைமை அதிகாரியான இசுரு குணசேகர, DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா, DFCC வங்கியின் சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட மற்றும் எமிரேட்ஸ் விமானசேவையின் இலங்கைக்கான பயணிகள் விற்பனைப் பிரிவின் தலைமை அதிகாரியான தேவிகா அல்லேபொல.
இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பவர்கள் - டயலொக் அக்சிஆட்டா பிஎல்சியின் குழும பிரதான வாடிக்கையாளர் சேவை அதிகாரியான சன்ட்ரா டி சொய்சா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நிறைவேற்று துணைத் தலைமை அதிகாரி, பிரதம மக்கள் அதிகாரி, நிலைபேற்றியல், நிறுவன இடம் முகாமைத்துவம் மற்றும் குழும முயற்சிகளுக்கான தலைமை அதிகாரியான இசுரு குணசேகர, அமர்வைத் தொகுத்து வழங்கிய த்ரிஷ்மா பின்டோ, DFCC வங்கியின் சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட மற்றும் எமிரேட்ஸ் விமானசேவையின் இலங்கைக்கான பயணிகள் விற்பனைப் பிரிவின் தலைமை அதிகாரியான தேவிகா அல்லேபொல.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM