இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் 2360 வீதி விபத்துக்களில் 2538 பேர் மரணித்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இதில் 760பேர் மோட்டார் சைக்கிள் விபத்து மூலம் மரணித்துள்ளதுடன் 726பேர் நடை பயணிகளாகும் என்றும் சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட குறிப்பிடுகையில்,
வேகமாக அதிகரித்து செல்லும் வீதி விபத்து காரணமாக நாௌான்றுக்கு 6,7 பேர் வரை மரணிப்பதுடன் காயமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. வீதி விபத்துக்கள் மூலம் மரணம் மற்றும் காயம் ஏற்படுகின்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்களை பாதுகாக்கின்ற வீதி கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அத்துடன் அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்ற வீதிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதிகமான விபத்துக்கள் ஏற்படுகின்ற வீதிகளின் கணிப்பீட்டின் அடிப்படையில் கல்கிஸை பொலிஸ் வட்டாரத்தில் மெலிபன் சந்தியிலிருந்து தெஹிவளை பொலிஸ் வட்டாரத்தில் கௌடான சந்தி வரையான 3.1 கிலோமீட்டர் பகுதியில் அதிகமான வீதி விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக பதியப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த பகு திகளில் வீதி பாதுகாப்பு தொடர்பான அறிவித்தல் பலகை மற்றும் வேறு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.
மேலும் மெலிபன் சந்தி முதல் கௌடான சந்தி வரையான பகுதியில் அதிகமான வீதி விபத்துக்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்திருப்பது அந்த பாதையில் பாதுகாப்பு வேலி இல்லாமையும் புவியியல் ரீதியில் வீதி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையுமாகுமென மேற் கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் தெரிய வருகின்றது என அவர் மேலும் தெரி வித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM