சுதந்திர வர்த்தகம் தொடர்பான கொள்கைகளை முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் 

Published By: Nanthini

06 Nov, 2022 | 04:15 PM
image

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பதற்கும், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (RCEP) அங்கத்துவம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக சேவைத்துறையை படிப்படியாக தாராளமயமாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதிக்கும் தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை (நவ 4) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சுதந்திர வர்த்தகம், சர்வதேச வர்த்தகத்தின் எதிர்கால தோற்றம் மற்றும் அதற்கேற்றாற்போல கொள்கைகளை மாற்றியமைப்பது போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு நீண்ட நேரம் விளக்கமளித்தார்.

மேலும், விரிவடைந்துவரும் சர்வதேச வர்த்தக செயற்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், இதனால் ஏற்படக்கூடிய போட்டித்தன்மை  காரணமாக உள்நாட்டு தொழில் துறைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கும் ஏதுவாக அரசாங்கம் வர்த்தக நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய மற்றும் உலக மட்டத்திலான விநியோகச் சங்கிலியை அணுகுதல், உலகப் பொருளாதாரத்துடன் மீள இணைதல் என்பன நாட்டின் பொருளாதாரத்தை மீள புதுப்பிப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படை மூலங்களாகும். 

இதற்கமைய அரசாங்கம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பிரதான ஏற்றுமதிச் சந்தையில் பிரவேசித்து வருகின்ற அதேவேளை, தனது ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரங்களை இலக்குவைத்து விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் முயற்சியிலும் களமிறங்கியுள்ளது.

இந்நோக்கத்துக்காக தேசிய வர்த்தக கலந்துரையாடல் குழுவை (NTNC) நியமிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

பாரியளவிலான நேரடி முதலீடுகள் மற்றும் சிறந்த ஏற்றுமதி நிலவுகின்ற நாடுகளான இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதே இக்குழுவின் பிரதான இலக்காகும். 

இதன் மூலம் பொருளாதார நெருக்கடியால் உள்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள கைத்தொழில் துறைகளுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஆரம்ப மூலப்பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் மற்றும் மூலதனங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வர்த்தக, வாணிபம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், திறைசேரி ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08