தயாரிப்பு : வயாகாம் 18 ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள் : அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பலர்
இயக்கம் :ரா கார்த்திக்
மதிப்பீடு : 2.5 / 5
கதையின் நாயகனான அர்ஜுன், பால்ய பிராயத்திலிருந்து காமிக்ஸ் கதை புத்தகங்களையும், வேறு நூல்களையும் வாசிக்கும் பழக்கம் கொண்டவன். கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் கற்பனையாகத் தன்னைப் பொருத்திக் கொண்டு கதைகளை வாசிக்கும் நாயகன், வளர்ந்து இளைஞனாகி வேலைக்கு செல்கிறான்.
அவன் தன்னுடைய பணிகளில் உயர்தர சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழ்கிறான். அவனுக்கு அவனது பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயித்த பெண்ணுடன் இரண்டு மாத காலம் பழகுகிறான். திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றும் இருவரும், திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தருணத்தில் மணப்பெண் தன்னுடைய காதலுடன் சென்றுவிடுகிறாள்.
இதனால் நாயகனின் திருமணம் தடை படுகிறது. இது அவனுக்கு பணியிட சூழலிலும், நண்பர்களின் வட்டாரத்திலும், உறவினர்களின் மத்தியிலும் அவமானத்தை அளித்துவிட்டதாக கருதி மன அழுத்தத்திற்கு ஆளாகிறான். அதிலிருந்து வெளியேறுவது எப்படி? என தெரியாமல் திணறும்போது, குடும்ப நண்பரான டொக்டர் ஒருவர், அவனுக்கு வாசிக்கும் பழக்கம் இருப்பதால், இரண்டு டைரிகளை அவனுக்கு படிக்குமாறு கொடுக்கிறார்.
அவன் அந்த இரண்டு டைரிகளில் எழுதப்பட்ட கதையை, தன்னுடைய வழக்கத்திற்கு ஏற்ப, தன்னைப் பொருத்திக் கொண்டு வாசிக்கிறான். ஆனால் கதையின் உச்சகட்ட காட்சி இல்லை. இதனால் தவித்து போய், டொக்டரிடம் கேட்க, அவரோ.. ‘அது கதையல்ல. நிஜமான இரண்டு காதலர்களின் கதை. அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நீயாக அவர்களைத் தேடிச் சென்று தெரிந்து கொள்’ என சொல்கிறார். அதற்குப் பின் அந்த இரண்டு டைரிக்குள் எழுதப்பட்டிருக்கும் இரண்டு காதலர்களையும் சந்தித்தாரா? அவர்கள் இருவரும் நாயகன் எதிர்பார்ப்பது போல் இருந்தனரா? இல்லையா? என்பதுதான் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் திரைக்கதை.
பொதுவாக பயணம் தொடர்பான கதை என்றால், சாகச பயணம், புனித பயணம், தேனிலவு பயணம், ஆன்மீகப் பயணம், இன்ப சுற்றுலா.. என பலவகையான பயணங்கள் இருக்கிறது இந்தப் பயணத்தின் நோக்கமும் பயணிப்பவர்களின் மனமகிழ்ச்சியை சார்ந்தே இருக்கும். ஆனால் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் நாயகன் தன் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், தான் வாசித்த இரண்டு கதையிலுள்ள காதலர்களின் இன்றைய நிலையை அறியவும் பயணத்தின் நோக்கமாக இருப்பதால்.. பார்வையாளர்களும் இயல்பாகவே நாயகனுடன் பயணிக்கத் தொடங்குகிறார்கள். பயணத்தில் நாயகன் சந்திக்கும் புதிய கதாபாத்திரங்கள் வாழ்வை பற்றிய நேர் நிலையான புரிதலை நாயகனுக்கு உணர்த்துகிறது. இதனால் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடித்துப் போகிறது.
இயக்குநரின் ரசனையான சிறு சிறு திருப்பங்கள், பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒளிப்பதிவும், இசையும் இயக்குநருக்கு வலு சேர்க்கும் வகையில் தோள் கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பனி படர்ந்த பகுதிகளின் காட்சிகளில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் இணைந்து கரம் கோர்த்து உழைத்திருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
நாயகனாக அசோக் செல்வன், அவருடைய நிஜ கதாபாத்திரத்திலும், அவர் வாசிக்கும் கதையின் கற்பனை கதாபாத்திரத்திலும் பொருத்தமாக நடித்திருக்கிறார். கற்பனை கதையில் அசோக் செல்வன் வரும் காட்சிகள், இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் அண்டனி நடிப்பில் வெளியான 'காளி' படத்தினை நினைவுப்படுத்தினாலும், இயக்குநர் இரண்டாம் பாதியில் சுவாரசியமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவே செய்கிறார்.
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் இல்லாமல் இருப்பது போல்.. கதாநாயக கதாபாத்திரத்தை உருவாக்கி, அவர்களின் போக்கிலேயே பயணிக்க வைத்து வாழ்க்கை என்றால் பொருள் பொதிந்தது.. சமரச உடன்பாட்டுக்கு உரியது..நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவேண்டும்.. என நேர் நிலையான புரிதல்களை உணர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.
நடிகைகளின் அபர்ணா பாலமுரளி, ரீத்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் என்ற வரிசையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். பாடல்கள் அனைத்தும் பட மாளிகையில் படத்தை பார்க்கும் ரசிகர்களின் மனநிலையை திசை திருப்பாமல் கதையுடன் பயணிக்க வைப்பதால் ரசிக்க இயலுகிறது.
நித்தம் ஒரு வானம் - புத்தம் புது காலை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM