சீனா - இந்தியாவைக் கையாள 8 பேர் : வெளிநாடு செல்லும் முன் ரணில் வியூகம் 

Published By: Nanthini

05 Nov, 2022 | 07:53 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

லங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கு 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

அத்துடன் எகிப்தில் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  ஞாயிற்றுக்கிழமை (நவ 6) அதிகாலை எகிப்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எகிப்தில் இவ்வாரம் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான 'கோப் 27' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்படுவதற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்காக முக்கிய சில தீர்மானங்களை எடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.  

இதன்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தியது. அதாவது கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமிருந்து ஆரோக்கியமான  வெளிப்பாடுகளை இதுவரையில் காண முடியவில்லை. 

எனவே, இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் குழு அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஏற்கனவே சிறந்த உத்தரவாதங்களை அளித்துள்ளனர். சீன மக்கள் காங்கிரஸின் வருடாந்த மாநாடு இடம்பெற்றமையினால் அவர்களுடன் கலந்துரையாட முடியாமல் போனது.

தற்போது நிலைமை சீராகியுள்ள நிலையில் இது தொடர்பாக கலந்துரையாடி, இறுதித் தீர்மானம் எடுக்க முடியுமென அரசாங்கத்தின் சார்பாக சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்ததுடன், கிடைக்கப்பெற்றுள்ள வலியுறுத்தல்களை ஜனாதிபதியுடன் அவசரமாக கலந்துரையாடுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன் பிரகாரம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த சாகல ரத்நாயக்க சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளின் வலியுறுத்தல்களை குறிப்பிட்டார். 

இந்நிலையில் சீனா மற்றும் இந்தியாவுடன் கலந்துரையாடி, கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.  

இதன் அடிப்படையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, திறைச்சேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் ஜனாதிபதியின் குழுவில் உள்ளடங்குகின்றனர்.

நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முழு உலக நாடுகளும் அவதானித்து வருகின்றன. மேலும், பல நாடுகள் எமது நடவடிக்கைகளை முன்னுதாரணமாக கொள்வதற்கும் ஆர்வத்துடன் கண்காணித்து வருகின்றன. அந்த நாடுகளின் வரிசையில் செம்பியா முதலிடத்தில் உள்ளது. 

எனவே, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டங்களை மிகவும் அவதானத்துடன் செயல்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகையில், 

தலைவர் ஒருவருக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரம் போதாது. அதனை பயன்படுத்த சிறந்த அறிவும் இருக்க வேண்டும். அவ்வாறிருந்தால், ஆட்சியை கைப்பற்றவும், அதனை பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். இது நவம்பர் 2 எதிரணியினரின் போராட்டத்தின்போது வெளிப்பட்டதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...

2024-04-15 14:15:52
news-image

நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'

2024-04-15 09:49:17
news-image

பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...

2024-04-10 15:23:29
news-image

கச்சதீவும் மோடியும்

2024-04-08 16:04:18
news-image

காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி

2024-04-08 10:10:33
news-image

யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...

2024-04-05 17:47:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான தேசிய வேட்பாளர்...

2024-04-04 13:20:01
news-image

நாமலின் நியமனத்தால் கடும் விரக்தியில் சமல்

2024-04-01 11:03:34
news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14