யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ் மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதுண்டு இரவு 12.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த விபத்தில் யாழ். உடுப்பிட்டியைச் சேர்ந்த பஸ்ஸின் சாரதியான சிவபாலன் சிவரூபன் உயிரிழந்துள்ளார்.
பஸ் சாரதியான உடுப்பிட்டியை சேர்ந்த சிவரூபன் கிராமத்தின் பல்வேறு சமூக, சமய செயற்பாடுகளிலும் துடிப்புடன் முன்னின்று செயற்படுபவராவார். சமூக செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராவார். அத்துடன் கடின உழைப்பாளியுமாவார். இவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்துக்குளான அதி சொகுசு பஸ்ஸை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் ஏ9 வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 12.15 அளவில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
குறித்த பேருந்தை தொடர்ந்து வந்த மற்றுமொரு சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான அதி சொகுசு பேருந்தினை மீட்கும் பணி பாரிய பாரந்தூக்கியுடன் துணையுடன் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக ஏ9 வீதி போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், ஏ9 வீதியில் பாலத்தின் இரண்டு மருங்கிலும் ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு வாகனங்கள் காத்து நிற்பதையும் அவதானிக்க முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM