உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி கிரேம் கிரீமர் தலைமையிலான சிம்பாப்வே அணியுடன் இன்றைய தினம் நடைபெறும் முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது.
புலவாயோ குயின்ஸ் பார்க் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகளுக்கிடையிலான முக்கோண சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றன. இதில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் நிலையில் , இலங்கை அணி 11 புள்ளிகளுடன் முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் மற்றைய அணிக்கான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் சிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற தீர்க்கமான போட்டியில் மழை குறுக்கிடவே சிம்பாப்வேஅணி டக்வேர்த் லூயிஸ் விதிமுறைப்படி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்றைய இறுதிப் போட்டியில் குசல் பெரேரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. அவ்வாறு அவர் விளையாடாத பட்சத்தில் ஷெஹான் ஜயசூரிய தனஞ்சய சில்வாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு குசல் பெரேரா விளையாடாத பட்சத்தில், பந்துவீச்சில் மேலதிகமாக ஒருவரை சேர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. அதன்படி ஜெப்ரி வெண்டர்சேவுக்கு அவ்வாய்ப்பு வழங்கப்படும்.
இத்தொடரில் இலங்கை அணியின் களத்தடுப்பானது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் பந்து வீச்சிலும் சிறப்பாக செயற்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சிம்பாப்வே தனது சொந்த மைதானத்தில் விளையாடுகின்றமை அவ்வணிக்கு மாபெரும் பலமாகும். அண்மைக்காலமாக சிம்பாப்வே கிரிக்கெட் அணி முன்னேற்றமடைந்து வருவதை அவதானிக்கலாம்.
அந்த வகையில் சிம்பாப்வே அணியை இலங்கை அணி வெற்றி கொள்வது மிகவும் கடினமானதாகும். ஆகவே, இப்போட்டியை இலங்கை அணி மெத்தனப் போக்குடன் விளையாடாது, சிறப்பாக செயற்பட்டால் வெற்றிபெற முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM