கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் : கைதானவருக்கு விளக்கமறியல்

03 Nov, 2022 | 12:01 PM
image

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்மீது  தாக்குதல் நடத்தினார் என்ற சந்தேகத்தில்  கைதான ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (02) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்துக்கு வந்த மக்களிடம் அமைதியைக்  கடைப்பிடிக்குமாறு  அறிவிக்குமாறு நீதிவான்  பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது  நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் திறந்த நீதிமன்றத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம்  நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அமைதி காக்கும்படி அறிவித்துள்ளார்.

இதன்போது அங்கிருந்தவர்களில் ஒருவர்,  குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் அவரை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் அவரை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேக நபரை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55