கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தினார் என்ற சந்தேகத்தில் கைதான ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (02) நுவரெலியா நீதிவான் நீதிமன்றத்துக்கு வந்த மக்களிடம் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு அறிவிக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது நீதிமன்றத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் திறந்த நீதிமன்றத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு அமைதி காக்கும்படி அறிவித்துள்ளார்.
இதன்போது அங்கிருந்தவர்களில் ஒருவர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் அவரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
பின்னர் அவரை நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேக நபரை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM