(நெவில் அன்தனி)
இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான தீர்மானம் மிக்க ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 1 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டி ப்றிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டியில் நியூஸிலாந்து வெற்றிபெற்றால் முதலாவது அணியாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். இங்கிலாந்து வெற்றிபெற்றால் குழு 1க்கான கடைசிக் கட்டப் போட்டி முடிவுகளே அரை இறுதி அணிகளைத் தீர்மானிக்கும்.
இங்கிலாந்து தோல்வியைத் தழுவினால் உலகக் கிண்ணத்திலிருந்து முதல் சுற்றுடன் வெளியேறும் அபாயத்தை எதிர்கொள்ளும்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இருபது 20 உலகக் கிண்ண அரை இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோதியபோது டெறில் மிச்செல் (72 ஆ.இ.), டெவன் கொன்வே (46), ஜேம்ஸ் நீஷாம் (27) ஆகியோர் திறமையாக துடுப்பெடுத்தாடி நியூஸிலாந்தின் வெற்றியை உறுதி செய்திருந்தனர்.
அப் போட்டியில் விளையாடிய பெரும்பாலானவர்கள் இந்த வருட நியூஸிலாந்து அணியிலும் இடம்பெறுவதால் இந்த வருடம் சம்பியனாவதற்கு அனுகூலமான அணியாக கருதப்படுகிறது.
எனவே இன்றைய போட்டியில் நியூஸிலாந்தை வெற்றி கொள்வது இங்கிலாந்துக்கு இலகுவாக அமையப்போவதில்லை.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள குழு 1க்கான போட்டிகளில் சகலதுறைகளிலும் நியூஸிலாந்து பிரகாசித்துள்ளது.
ஆனால், இங்கிலாந்தின் ஆற்றல்கள் திருப்தி தருவதாக அமையவில்லை.
இந்த இரண்டு அணிகளும் பங்குகொண்ட போட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவிலான பெறுபேறுகளைக் கொண்டுள்ளன.
2007இல் இருந்து கடந்த வருடம்வரை இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் 22 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 12 போட்டிகளில் இங்கிலாந்தும் 8இல் நியூஸிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன. சமநிலையில் முடிவடைந்த போட்டியில் இங்கிலாந்து சுப்பர் ஓவரில் வெற்றிபெற்றதுடன் மற்றொரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.
அணிகள்
இங்கிலாந்து : ஜொஸ் பட்லர் (தலைவர்), அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஹெரி ப்றூக், மொயீன் அலி, சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ராஷித், மார்க் வூட்.
நியூஸிலாந்து: டெவன் கொன்வே, பின் அலன், கேன் வில்லியம்சன், டெரில் மிச்செல், க்லென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதீ, ட்ரென்ட் போல்ட், லொக்கி பேர்குசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM