(எம்.வை.எம்.சியாம்)
கடுகண்ணாவ பிரதேசத்தில் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்று (31) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடுகன்னாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு- கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ, ஹெனவல பிரதேசத்தில் பிலிமந்தலாவயிலிருந்து கடுகண்ணாவை நோக்கி பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் கடுகண்ணாவையில் இருந்து பிலிமத்தலாவ நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஹெனாவெ, கலன்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 19 வயதுடைய மாகெஹெவல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் ஹெனாவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கலெபிந்துவௌ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM