முக்கோணத்தொடரின் சிம்பாப்வே - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இன்றைய போட்டியின் இரண்டாம் பாதியில் மழைக்குறுக்கிட்டதால் “டக்வர்த் லுவிஸ்” முறைப்படி சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றிபெற்றதனூடாக சிம்பாப்வே அணி இறுதிப்போட்டியில் இலங்கை அணியுடன் மோதும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி மழைக்குறுக்கிட்ட நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 218 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.
சிம்பாப்வே அணிசார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்த ரஷா 76 ஓட்டங்களையும், சிசாரோ 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் பிஷ்ஹு மற்றும் நெர்ஷ் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
219 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 27.3 ஓவர்கள் நிறைவில் 4.50 என்ற சராசரியில் 124 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழைக்குறுக்கிட்டது.
எவ்வாறாயினும் மழைவிடாமல் பெய்துக்கொண்டிருந்தமையால் போட்டி நிறுத்தப்பட்டு, போட்டியின் வெற்றி சிம்பாப்வே அணிக்கு வழங்கப்பட்டது.
போட்டியின் சிறப்பாட்டக்காராக 42 ஓட்டங்களை பெற்றதுடன், இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றிய சிம்பாப்வே அணியின் சிசாரோ தெரிவுசெய்யப்பட்டார்.
இதேவேளை முக்கோணத்தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM