லத்தீப் பாரூக்
18ஆவது நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் மாநிலத்தை ஆட்சி செய்த திப்பு சுல்தான் மைசூரின் வேங்கை என்று வர்ணிக்கப்பட்ட மாபெரும் வீரராவார். இந்தியாவில் பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி இவர் தான். பின்னர் தனது உயிரையும் தியாகம் செய்தார். மைசூரின் சுல்தான் ஹைதர் அலி அவரது மனைவி பாத்திமா பக்றுன் நிஸா ஆகியோருக்குப் புதல்வராக 1750 நவம்பர் 10இல் தேவானாஹல்லி எனப்படும் தற்போதைய பெங்களுரில் பிறந்தவர் தான் திப்பு சுல்தான். 1782 முதல் 1799 வரை இவர் மைசூரை ஆட்சி செய்தார்.
1766இல் தனது 15ஆவது வயதில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான முதலாவது மைசூர் யுத்தத்தில் அவர் தனது தந்தையோடு பங்கேற்றார். 1767இல் தனது 16ஆவது வயதில் கர்நாடகாவுக்குள் ஊடுருவிய பிரித்தானிய குதிரைப் படைப்பிரிவை எதிர்த்துப் போராடிய படையணியின தளபதியாக அவர் கடமையாற்றினார். அவரது தந்தையால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பிரான்ஸ் அதிகாரிகளிடமிருந்து அவர் இராணுவ உத்திகளைக் கற்றுக் கொண்டார்.
1782 டிசம்பர் 29இல் திப்பு சுல்தான் தனது தந்தையிடமிருந்து ஆட்சி அதிகாரங்களைப் பொறுப்பேற்று சுல்தான் என்ற மகுடத்தையும் சூடிக் கொண்டார். தனது துணிச்சல், ஆற்றல் என்பன காரணமாக பெரும் புகழ் அடைந்த அவர் தென் இந்தியாவில் பிரித்தானியா படைகளை எதிர்த்து மிகக் கடுமையாகப் போராடினார்.
சக்தி மிக்க இராணுவ ஜெனரலாகவும் பூகோள அரசியலின் சூட்சுமங்களை நன்கு புரிந்து கொண்டவராகவும் (பிரித்தானியர்களுக்கு எதிராக பிரஞ்சுக்காரர்களைப் பயன்படுத்துவது) அவர் காணப்பட்டார். யுத்தத்தில் நவீன அனுகுமுறைகளையும் அவர் கையாண்டார்.
முதன் முதலாக ரொக்கட் தாக்குதலை நடத்தியது அல்லது முதன் முதலாவதாக ரொக்கட் தாக்குதல் நடத்திய இராணுவ அணிகளில் ஒன்றாக இருந்தது திப்பு சுல்தானின் இராணுவம் தான் என்பது வரலாறாகும். “ஒரு குள்ளநரியைப் போல் பல நூற்றாண்டுகள் உயிர் வாழ்வதை விட ஒரு சிங்கத்தைப் போல் ஒரு நாள் உயிர் வாழ்வது மேலானதாகும்” என்ற கூற்றை அவர் மிக உறுதியாக நம்பிப் பின்பற்றினார்.
திப்பு சுல்தானும் அவரது தந்தை ஹைதர் அலியும் பிரித்தானிய படைகளுக்கு எதிராக நான்கு யுத்தங்களில் ஒன்றாகப் பங்கேற்றுள்ளனர். மராத்தியர்கள், திருவிதாங்கூர், கர்நாடகம், மலபார், குடகு ஆகிய படைகளுக்கு எதிராகவும் அவர்கள் பல யுத்தங்களை சந்தித்துள்ளனர்.
நாணயக் குற்றிகளின் அறிமுகம், சந்திர சூரிய கலப்பு கலண்டர், புதிய காணி வருமான ஒழுங்கு முறை எனப் பல புதிய விடயங்களை அறிமுகம் செய்ததோடு மைசூரில் பட்டு உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கும் வித்திட்டார்.
1799மே மாத ஆரம்பத்தில் பிரிட்டனும் அதன் நேச அணிகளும் மைசூரின் தலைநகரமான ஸ்ரீரங்கபட்டிணத்தை சூழ்ந்து கொண்டனர். மே மாதம் நான்காம் திகதி தலைநகரின் காவல் மதிலை உடைத்துக் கொண்டு முன்னேறின. இதைக் கேள்வியுற்ற திப்பு சுல்தான் அந்த இடம் நோக்கி வேகமாக முன்னேறினார். ஆனால் தனது நகரைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் தனது உயிரையே துறந்தார்.
திப்பு சுல்தானின் மரணத்தோடுஷெஸாதா ஹைதர் அலி மற்றும் குடும்பத்தவர்கள் 1799 ஜுன் 19இல் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் கிழக்கு இந்திய கம்பனியின் காவலின் கீழ் வைக்கப்பட்டனர்.
எவ்வாறேனும் ஷெஸாதா ஹைதர் அலி அந்தக் காவலில் இருந்து தப்பினார். திப்பு சுல்தானின் குடும்பம் மிகவும் திட்டமிட்ட வகையில் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது. 2009இல் தான் அந்தக் குடும்பம் மீண்டும் இளவரசர் அந்தஸ்த்துக்கு மீட்கப்பட்டது.
பிரித்தானியாவின் அனுசரணையில் செயல்பட்ட ராஷ்டிரிய சுயம் சேவா (ஆர்.எஸ்.எஸ்) அமைப்பு மேலும் அதன் முன்னணி பிரசார அமைப்புக்களான பா.ஜ.க. உட்பட இந்தியாவின் சுதந்திரத்தைப் பாதுகாக்க திப்பு சுல்தான் நடத்திய போராட்ட வரலாற்றை மலினப்படுத்தி அழித்து விடும் வகையில் பிரசாரங்களில் ஈடுபடலாயின.
சென்னையில் ஒரு வைபவத்தில் பேசும் போது மாயா மஹேஸ்வரி என்பவர் இந்த பிரசாரங்களை முற்று முழுதாக நிராகரித்தார். திப்பு சுல்தானின் அமைச்சர்கள் யாவரும் இந்துக்களே என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தீயபிரசாரங்கள் பற்றி ‘திப்பு சுல்தான் ஆர்எஸ்எஸ். பா.ஜ.க.கூட பல்வேறுதரப்பட்ட கதைகள்’ எனும் கட்டுரையில் பிரபல பத்தி எழுத்தாளர் ராம் புனியானி சில வருடங்களாக திப்பு சுல்தான் பற்றி பா.ஜ.க. தீய பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.
தற்செயலாக ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்ட இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவின்ந் ‘திப்பு சுல்தான் பிரித்தானிய படைகளை எதிர்த்து வீரமரணம் அடைந்தார். யுத்தங்களின் போது மைசூர் ரொக்கட்டுக்களை அறிமுகம் செய்வதிலும், விருத்தி செய்வதிலும் பயன்படுத்துவதிலும் அவர் முன்னோடியாக திகழ்ந்துள்ளார்’ என்று குறிப்பிட்டுவிட்டார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2010இல் பா.ஜ.க. தலைவர் பி.எஸ்.யெத்தயூரப்பா தேர்தல் பிரசாரத்தின் போது திப்பு சுல்தான் அணியும் தலைக்கவசம் பற்றி பாராட்டிப் பேசியதோடு அவரது வாளைப் போன்ற ஒரு வாளையும் ஏந்தி நின்றார். 1970களில் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்ட ஒரு புத்தகத்தில் திப்பு சுல்தானைப் பாராட்டியுள்ளதோடு தேசப்பற்றாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
திப்பு சுல்தானின் மரணத்தின் புகழ்பாடும் கர்நாடக நாட்டுப்புற பாடல்கள் பல (லவானீஸ்) உள்ளன. அவை எதிலும் அவர் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் எதுவும் இல்லை. 19ஆம் நூற்றாண்டில் அவை மிகவும் பிரபலமாக இருந்தன. அவர் யுத்தகளத்தில் மரணம் அடைந்த ஒரு வருடங்களில் 1800 களில் இந்தப் பாடல்கள் பெரும் புகழ் பெற்றன.
காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் மீதும் அவர் பெரும் மரியாதை கொண்டிருந்தார். அந்த வகையில் அவர் இந்துக்களை கொலை செய்தார் என்பது எந்த வகையிலும் சாத்தியமாகாத ஒன்று. நூற்றுக்கணக்கான இந்து கோயில்களை அவர் புனர்நிர்மாணம் செய்தார் இன்னும் பல கோயில்களை அவர் கட்டினார்.
இந்த வீரம் மிக்க ஒரு மன்னனின் வாழ்வை சமநிலையில் நோக்க வேண்டும். அவர் பிரித்தானியா பெரும் படையை வீரத்தோடு எதிர்கொண்டார். பிரித்தானியா முற்றிலும் வித்தியாசமானதொரு படை அணியைக் கொண்டது என்பதை தெரிந்திருந்தும் அதை எந்த விலை கொடுத்தேனும் எதிர்த்து நிற்க வேண்டும் என்ற துணிச்சலை அவர் கொண்டிருந்தார். அந்த வகையில் இந்திய மண்ணில் பிரித்தானிய எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடியாக அவரே திகழ்கின்றார்.
திப்பு சுல்தானை புகழுக்கும் பெருமைக்கும் உரிய வீரனாகக் காட்டுவதற்கு பதிலாக அவரை தீய சக்தியாகக் காட்ட முனையும் இனவாதிகளின் ஊசலாட்டங்கள், தமது இனவாத கருத்தியலை தக்க வைத்து ஊக்குவிப்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளே தவிர வேறொன்றும் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM