பாடசாலை மாணவன் மீது துப்பாக்கிப் பிரயோகம்: விசாரணை அறிக்கை தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பிப்பு

Published By: Vishnu

30 Oct, 2022 | 01:24 PM
image

(எம்.மனோசித்ரா)

மாத்தறை பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவனுடன் முச்சக்கரவண்டியில் சென்ற பிரிதொரு மாணவனிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பில் மாத்தறையிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கிளை அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேரடி தலையீட்டுடன் கடந்த வெள்ளிக்கிழமை திஹகொட - நாயிம்பல பிரதேசத்தில் பாடசாலை மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் நேற்று சனிக்கிழமை சம்பவ இடம் பார்வையிடப்பட்டதோடு , முச்சக்கரவண்டியில் சென்ற ஏனைய மாணவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதன் போது அப்பிரதேச மக்களையும் சந்தித்து கலந்துரையாடிய அலுவலக அதிகாரிகள் , அவர்களிடம் அமைதியாக செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , விசாரணைகளின் முடிவுகள் , பொறுத்தமான பரிந்துரைகளுக்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04