(எம்.வை.எம்.சியாம்)
எல்லா பதுல்ல- பண்டாரவெல பிரதான வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் பஸ் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எல்லா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை-பண்டாரவளை பிரதான வீதியில் பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த பஸ் ஒன்றுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி, பெண் ஒருவர் மற்றும் மற்றொரு நபரும் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய, மடுல்சீம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.
விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM