(நெவில் அன்தனி)
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிவரும் இலங்கை அணிக்கு தயார் நிலை வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ, மதீஷ பத்திரண, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல ஆகிய மூவரையும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் பிரதான குழாத்திலுள்ள வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அவசியப்பட்டால், அந்த இடங்களை நிரப்புவதற்காகவே இந்த மூவரும் தயார்நிலை வீரர்களாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
இந்த மூன்று வீரர்களுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலைய தலைமை அதிகாரி டிம் மெக்கெஸ்கில்லும் அவுஸ்திரேலியா செல்கிறார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் முதலாவது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற நேரிட்ட ஒரு நாள் கழித்து மூன்று தயார்நிலை வீரர்களை அவுஸ்திரேலியா அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டில்ஷான் மதுஷன்கவுக்கு பதிலாக மாற்று வீரராக அணியில் இணைக்கப்பட்ட பினுர பெர்னாண்டோ, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளை மாத்திரம் வீசிய நிலையில் உபாதைக்குள்ளாகி களம் விட்டு வெளியேறினார்.
டில்ஷான் மதுஷன்க, துஷ்மன்த சமீர ஆகியோருக்கு அடுத்ததாக உபாதைக்குள்ளான மூன்றாவது பந்துவீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆவார்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிரான முதல் சுற்றுப் போட்டியின்போது உபாதைக்குள்ளான ப்ரமோத் மதுஷான், அதன் பின்னர் விளையாடாதபோதிலும் அவர் தொடர்ந்தும் குழாத்தில் இடம்பெற்றுவருகிறார்.
பந்துவீச்சாளர்கள் மூவர் ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான தனுஷ்க குணதிலகவும் உபாதைக்குள்ளாகி குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அஷேன் பண்டார குழாத்தில் இணைக்கப்பட்டார்.
அதேவேளை, உபாதை காரணமாக அயர்லாந்துடனான போட்டியில் விளையாடாத பெத்தும் நிஸ்ஸன்கவுக்குப் பதிலாக அஷேன் பண்டார விளையாடினார். மத்திய வரிசை வீரராக அணியில் இடம்பெற்ற அவருக்கு துடுப்பெடுத்தாடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM