வெளிநாடுகளிடம் கடன் பெறுவது டொலர் பிரச்சினைக்கு தீர்வாகாது - சஜித் பிரேமதாஸ

Published By: Vishnu

26 Oct, 2022 | 09:27 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும் இறக்குமதி முறையின் பிரச்சினையாகும். பண்டோரா பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வருவதே இந்த டொலர் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த தீர்வாகும் எனவும் அவ்வாறு இல்லாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து கடன் பெறவதல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்தக உதவியாளர் சங்கம், அவர்களின் தொழில் முயற்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்ட தேசிய மக்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்று கூடி கலந்தாலோசித்த போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்

மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும் இறக்குமதி முறையின் பிரச்சினையாகும். பண்டோரா பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வருவதே இந்த டொலர் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த தீர்வாகும்.

இதன் மூலம் மருந்து தட்டுப்பாடு மட்டுமின்றி நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும். மேலும் இது தனிநபர்களை குறிவைப்பதன் மூலம் அன்றி மாறாக தவறு செய்த மற்றும் கொள்ளையடித்த அரச வளங்கள் மற்றும் அரச சொத்துக்களை பெற்றுக் கொள்வதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணமும் சொத்துக்களும் 220 இலட்சம் பொதுமக்களின் சொத்துக்களாகும். ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த வழியைப் பின்பற்றுமா? என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என்றாலும் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் திருடப்பட்ட பணம் அனைத்தும் தெளிவான வெளிப்படத்தன்மையுடனும், பொறுப்புடனும் தொடர்புடைய அனைத்து வளங்களும் மீட்கப்படும்.

நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டமொன்று செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் இதுவரை 165 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் வேலைத்திட்டங்களின் ஊடாக சுகாதார துறைக்கு இவ்வாறு சேவைகள்  மேற்கொள்ளும் போது பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் கல்வித் துறைக்கு பெரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே என்ற கருத்தோட்டத்திலிருந்து தான் உள்ளிட்ட எதிர்க்கட்சியும் வேறுபட்டது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44