(இராஜதுரை ஹஷான்)
கொழும்பை சுற்றிவளைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இன்று போராட்டத்தில் ஈடுப்படுவதற்கான உண்மை நோக்கம் என்ன,போராட்டங்களினால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.
குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டு போராட்டங்களை தொடர்ந்தால் நாடு என்ற ரீதியில் மேலும் பாதிப்படைய நேரிடும்.யதார்த்த நிலையை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும் என வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
எரிபொருள்,எரிவாயு விநியோக கட்டமைப்பின் பாதிப்பு மற்றும்,தவறான அரசியல் தீர்மானங்களினால் மக்கள் போராட்டம் தோற்றம் பெற்று அது வன்முறையாக மாற்றமடைந்தது.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் விரக்தியடைந்து கடந்த அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கினார்கள்.
அரசாங்கத்திற்கு எதிராக இன்று வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுப்படுவதற்கான காரணம் என்ன,எரிபொருள்,எரிவாயு ஆகியவை தற்போது முறையாக கிடைக்கப்பெறுகிறது.
மக்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை,நீதிமன்றத்தினால் குற்றவாளியாக குறிப்பிடப்பட்ட தரப்பினரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியே ஒருதரப்பினர் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
போராட்டத்தில் ஈடுப்பட்டு பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை பலவீனப்படுத்தவே ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள்.
போராட்டம் இடம்பெறும் நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தரமாட்டார்கள்.நாடு வழமைக்கு திரும்பும் நிலையில் போராட்டத்தில் ஈடுப்படுவது முறையற்றதாகும்.
நாட்டில் மனித உரிமைகள் மீறல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டுக் கொண்டு சர்வதேச ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்காகவே ஒருதரப்பினர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க முடியாது.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளன.மூல பொருட்களின் விலை குறைவடைந்தாலும் உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைவடையவில்லை.அத்தியாவசிய பொருட்களின் விலையை நிலையான தன்மையில் பேண கொள்கை திட்டத்தின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM