(பா.ருத்ரகுமார்)
மஹபொல நிதியத்தில் 1.5 பில்லியன் ரூபா பணத்தை கொள்ளையடித்துள்ளதாக பொது எதிரணியினர் என் மீது குற்றம் சுமத்தியுள்ளமை என் வாழ்நாளில் சந்தித்த மிகப்பெரிய அவப் பெயராக நினைக்கின்றேன். 78 வயதில் இவ்வாறான குற்றச்சாட்டு எனக்கு தேவையா? நான் இறக்கும் வரையில் நன்மதிப்புடன் வாழ வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணி விக்கிரம வீரசூரிய மிகவும் உருக்கமாக தெரிவித்தார்.
மஹபொல நிதியத்திலிருந்து பணத்தை சூரையாடியதாக, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம மற்றும் சட்டத்தரணி விக்கிரம வீரசூரிய ஆகியோருக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கூட்டு எதிரணியினர் முறைப்பாடொன்றை நேற்று பதிவுசெய்துள்ளமை தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
எனது வாழ்நாளில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதில்லை. எனது சேவையைப்பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.
எனது இரு மகன்களுக்கும் மஹபொல நிதியத்திலிருந்து ஒரு சதமேனும் செலவழிக்கவில்லை.
எனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நான் இறப்பதற்கு முன்னர் சரியாகிவிடும் என நினைக்கின்றேன்.
வாழ்நாள் முழுவதும் நன்மதிப்புடன் நாட்டுக்காக சேவையாற்றியுள்ளேன்.
எனது மகன் குறிப்பிட்ட இரு நிறுவனத்தில் முதலீட்டாளர் என்பதற்காக இவ்வாறு வீண் பழி சுமத்துவது சரியான விடயமல்ல.
இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் எனது நிலைப்பாட்டையும் உண்மையான சான்றுகளையும் சமர்ப்பிப்பேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM