முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

24 Oct, 2022 | 06:10 PM
image

தொழில்முறை பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கான வாராந்த எரிபொருள்  ஒதுக்கீட்டை (கோட்டாவை) 05 லீற்றரில் இருந்து  10 லீற்றராக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் தொழில்சார்ந்த முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யும் பணிகள் நவம்பர் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி  பணிமனையின் பிரதானியுமான  சாகல ரத்நாயக்கவுக்கும் தொழில்சார்ந்த முச்சக்கர வண்டி சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று (24) நடந்த கலந்துரையாடலின் போதே இந்த விடயங்கள் வெளியிடப்பட்டன.

இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கும் வாரத்திற்கு 10 லீற்றர் எரிபொருள் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் இயங்கும்  பயணிகள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளை பதிவு  செய்யும் நடவடிக்கை நவம்பர் 6 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் பின்னர் அந்த முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, இலங்கையில் 10 இலட்சத்து 80,000 முச்சக்கர வண்டிகள் உள்ளன. அவற்றில் சுமார் 400,000 முச்சக்கர வண்டிகள் தொழில்முறை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதாக முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 300,000 பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகள்  பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 13 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து பயணிகள் போக்குவரத்து முச்சக்கர வண்டிகளையும்  பதிவு செய்ய முடியாத பட்சத்தில் பொலிஸில் பதிவுசெய்து  முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை வழங்க இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.  

இது தொடர்பில் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகளை துரிதமாக தெளிவுபடுத்த  திட்டமிடப்பட்டுள்ளது.

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய மற்றும் அதிகாரிகள்  இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17