தென்கொரியாவின் ஜனாதிபதி பார்க்குன் ஹெயின் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. பார்க்குன் ஹெயின் தனது நீண்ட கால தோழி சோய் சூன்னை உதவியாளர் போல் வைத்திருந்தார்.
ஆனால், சோய் சூன் தனது அதிகாரங்களை கையில் எடுத்து ஏராளமான தவறுகளை செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சியினரும் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி பார்க்குன் ஹெயின் ஆண்களுக்கான செக்ஸ் வீரிய மாத்திரையான வயாகரா மாத்திரைகளை அதிகளவில் அரசு பணத்தில் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 364 மாத்திரை இவ்வாறு வாங்கி இருக்கிறார்.
ஏன் இந்த மாத்திரைகளை அவர் வாங்கினார் என்பது மர்மமாகவுள்ளது. இதுபற்றி ஜனாதிபதி மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி சுற்றுப்பயணம் செய்தார். அந்த நாடுகள் கடல் மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் இருக்கின்றன. இதனால் அங்கு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படலாம் என கருதி அதை தடுக்கும் வகையில் வயாகரா மாத்திரை வாங்கியதாகவும், ஆனால், அந்த மாத்திரையை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதுபற்றி எதிர்க்கட்சியினர் கூறும் போது,ஜனாதிபதி தனி ஒரு உல்லாச உலகத்தில் வாழ்ந்தார். அதற்காக இந்த மாத்திரைகள் அவருக்கு தேவைப்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM