(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன உள்ளிட்ட 20 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிவித்த அதி உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்துக்கு எதிராக கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உயர் நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.ஜி.ஏ. சந்ரகுமார, கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பி.ஆர்.எம். அம்பேபிட்டிய, கொழும்பு தெற்கு பொலிஸ் அத்தியட்சர் ஜி.எம். மாரப்பன, கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ்ம, , மருதானை, டாம் வீதி, கோட்டை, கறுவாத்தோட்டம் உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகல் என 26 பேர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
சோசலிச இளையோர் சங்கத்தின் 6 செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்துள்ள இம்மனுவில், 20 பொலிஸ் அதிகாரிகள் பிரதிவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
இதுவரை இரு மனுக்கள் இந்த விடயத்தில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியும் நேற்று முன் தினமும் இது தொடர்பாக இரண்டு மனுக்கள் இவ்வாரு தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதற்கு கட்டளையிட்ட பொலிஸ் அதிகாரிகளையும் காணொளி மூலம் அடையாளம் கண்டதாக மனுதாரர்கலின் சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM