(எம்.வை.எம்.சியாம்)
அஹுங்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (21) தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அஹுங்கல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச்சென்ற பிரதான சந்தேகநபர் தலங்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சிங்கபுர பிரதேசத்தில் வைத்து கடந்த திங்கட்கிழமை அன்று 7 கிராம் 10 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு இருந்தார்.
மேற்படி கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மேற்கொண்டு வரும் கும்பலின் உறுப்பினர் ஒருவருடன் தொலைபேசி அழைப்புகளில் உரையாடி குறித்த குற்றச் செயல்களை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த நபரின் வாக்கு மூலகங்களுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர தலங்கம பொலிஸ் பிரிவற்கு உட்பட்ட பகுதியில் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய கொகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்
மேலும் இதன் போது கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த சம்பவங்களுக்கு உதவியமை தொடர்பில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் நேற்று முன்தினம் பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 29 வயதுடைய பெண் ஒருவரும் 32 வயதுடைய ஆண் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் கிந்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
சந்தேகநபரான குறித்த பெண் திட்டமிட்ட குற்றங்களை செய்து வரும் ஒருவரின் உறவினர் எனவும் அவரின் விருப்பத்தோடு அவரின் கிந்தொட்ட பகுதியில் உள்ள வீட்டில் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அஹுங்கல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் அஹுங்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM