கர்ப்பிணியின் பிட்டப் பகுதியை பிளேடினால் வெட்டிய நபர் கைது

Published By: Priyatharshan

24 Nov, 2016 | 12:33 PM
image

ஆறுமாத கர்ப்பிணிப் பெண்ணின் பிட்டப் பகுதியை பிளேட் ஒன்றினால் வெட்டிய நபரை  பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று மஹரகம நகரில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் வழமை போன்று நேற்றுக் காலை கடமைக்கு செல்லுவதற்காக பேரூந்தில் ஏறும் போது குறித்த சந்தேக நபர்  அவரது பிட்டப்பகுதியை பிளேடினால்  வெட்டியுள்ளார்.

குறித்த பெண் சத்தமிட்டதையடுத்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிட்டப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு 6 தையல் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் கொட்டாவை, ருக்மல்கமவைச் சேர்ந்தவரென்றும் தெஹிவளை பகுதியிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் தொழில் புரிபவரென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கர்ப்பிணிப்பெண் மீது தாக்குதல் நடத்திய சந்தேகநபர் இரத்தினபுரியைச் சேர்ந்தவரெனவும்  இரு பிள்ளைகளின் தந்தையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி மஹரகம மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் இதே பாணியில் குறித்த நபர் , இரு பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யசெய்யப்பட்ட சந்தேகநபரை கங்கொடவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவரும் மஹரகம பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18