இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்புப் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளைத் தளபதியுமான கே.எல்.என். சரத்சந்திர நேற்று கைதுசெய்யப்பட்டார்.
பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான ஜீப் வண்டியொன்றை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தினார் எனும் குற்றச் சாட்டிலேயே பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரால் (எஸ்.ஐ.யூ.) அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
1999 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டம் ஊடாக திருத்தப்பட்ட 1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 (1) ஆம் அத்தியாயத்துக்கு அமைவாகவும் தண்டனை சட்டக் கோவையின் விதிவிதானங்களுக்கு அமைவாகவும் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இந் நிலையில் கைது செய்யப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்சந்திர கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தர்வு பிறப்பித்தார்.
முன்னாள் அதிரடிப்படையின் கட்டளை தளபதியான ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்சந்திர, அப்பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஜீப் வண்டியான டப்ளியூ.பி.ஜி.பி 5548 எனும் ஜீப் வண்டியை தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளதாக தற்போதைய அதிரடிப்படை கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் ஊடாக பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவில் முறையிடப்பட்டது. இந் நிலையில் இது தொடர்பில் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மெவன் சில்வாவின் ஆலோசனைகளுக்கு அமைவாக அப்பிரிவின் 4 ஆம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜோர்ஜ் கஹந்தவின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் விஷேட அதிரடிப்படையின் கட்டளை தளபதியாக இருந்த சரச் சந்திர 2011.3.19 அன்று பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். அதன்பின்னர் அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பிலான இணைப்புச் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
இந் நிலையில் பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வுபெற்ற சரத்சந்திர, 2015.08.21 ஆம் திகதி வரை பொலிஸ் அதிரடிப்படைக்கு சொந்தமான டளியூ.பி.ஜி.பி. 5548 எனும் ஜீப் வண்டியைபயன்படுத்தியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகபபு அமைச்சின் அனுமதியை அவர் பெற்றிருந்தாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. இந் நிலையில் மேற்படி ஜீப் வண்டியை சரத்சந்திர 123 சந்தர்ப்பங்களில் தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி அந்த 123 சந்தர்ப்பங்களிலும் மொத்தமாக 8085 கிலோ மீற்றர்கள் தனிப்பட்ட தேவைகளுக்காக அந்த ஜீப் பயணித்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. 1478 லீற்றர் எரிபொருள் விரயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருளானது பொலிஸ் போக்கு வரத்து பிரிவினராலேயே வழங்கப்பட்டுள்ளது. அப்போது எரிபொருள் லீற்றர் ஒன்று 95 ரூபா 19 சதம் எனும் விலையிலேயே பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் பெறப்பட்டுள்ளது. அதன்படி பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத்சந்திர ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 690 ரூபா அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக இது வரை விசாரணைகளில் உறுதியாகியுள்ளன. அதன்படியே அவருக்கு எதிராக பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 5 (1) அத்தியாயத்தின் கீழும் தண்டனை சட்டக் கோவையின் 386,389,392 ஆகிய பிரிவுகளின் கீழும் குற்றம் சட்டப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் பீ அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இந் நிலையிலேயே முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் சந்திரவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM