K.B.சதீஸ்
வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குதல், நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தமிழர் சமூக ஐனநாயகக் கட்சியின் வன்னி பிராந்தியத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இவ் போராட்டத்தின் போது அரசே மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முழுமைப்படுத்து , அரசே மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடாத்து , தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் – நில – வீட்டு உரிமையை உறுதி செய் , வானத்தில் வட்டமிடும் விலைவாசியை – மக்களுக்கு கிட்டவாக கொண்டு வா ,கிழக்கு வடக்கில் மத இனவாத நோக்கிலான தொல்பொருள் தேடுதல்களை உடனடியாக நிறுத்து போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM