(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
பாதுகாப்பு படைத் தரப்பின் ஆதரவு இன்றி போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற முடியாது பாடசாலை மாணவர்களை இலக்காக கொண்ட போதைப்பொருள் வியாபார தொடர்பில் அரசாங்கம் கண்டுகொள்ளாது இருப்பது ஏன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நீதி அமைச்சின் 5 திருத்தச் சட்டங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டில் போதைப்பொருள் பாவனை மிகவும் சாதாரண விடயமாகிவிட்டது. இதனை தடுப்பதற்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் ஆராய வேண்டும். போதைப் பொருள் பாவனையால் நாங்கள் பின்தள்ளப்படும் நிலைக்கு செல்லலாம். இளைஞர் யுவதிகளிடம் மாத்திரம் அன்றி பாடசாலை மாணவர்களிடையும் பரவியுள்ளன.
வெளியாகும் செய்திகளில் இது தொடர்பான விடயஙகளை அவதானிக்கலாம். மாணவர்களிடையே கலாச்சார சீரழிவுகள் ஏற்படுகின்றன. இதற்கு பிரதான காரணமாக போதைப் பொருள் பாவனை உள்ளது.
நாங்கள் ஓரிடத்திற்கு செல்லும் போது, அதற்கு முன்னரே அங்கு செல்லும் புலனாய்வுத் துறையினர். அங்கு நாங்கள் ஏன் வருகின்றோம் என்ற தகவல்களை பெற்றுக்கொள்கின்றனர். அது அவர்களின் கடமையாக இருக்கலாம்.
இவ்வாறு புலனாய்வுத் துறை இயங்கும் போது ஏன் போதைப் பொருள் வியாபாரத்தை இலங்கை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை.
போதைப் பொருள் விடயத்தில் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்டுள்ளனரா? அல்லது படை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா என்ற கேள்விகள் எழுகின்றன. தற்போது மன்னாரில் அதிகளவில் போதைப் பொருள் பிடிபடுகின்றது. இந்நிலையில் எந்தவொரு படைத் தரப்பின் ஆதரவு இன்றி போதைப் பொருள் வியாபாரத்தை செய்ய முடியாது.
கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் இவர்களில் எவரேனும் ஒரு தரப்பின் அனுசரணை இன்றி போதைப் பொருள் வியாபாரம் நடக்க முடியாது. அல்லது அரசியல்வாதிகளின் செல்வாக்கும் உள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் ஏன் கணக்கில் எடுக்காது இருக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM