(எம்.வை.எம்.சியாம்)
கொக்கைன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் மன்னார்-நுரைச்சோலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு களில் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேக நபர்கள் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
கடந்த திங்கட்கிழமை கொக்கைன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நுரைச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட செனபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோ 26 கிராம் கொக்கைன் போதைப்பொருளினை வைத்திருந்த பிரதான சந்தேக நபர் மற்றும் அதனை விற்பனை செய்வதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் மேலும் 4 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் 36 வயதுடைய பத்குடுஓய பிரதேசத்தைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது இதன்போது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மற்றையவர்கள் 25, 26, 34 மற்றும் 53 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் கற்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மற்றுமொரு நபர் கொக்கைன் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து இதன்போது 506 கிராம் கொக்கைன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்டவர் 48 வயதுடைய சிலாவதுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவராவர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அறுவரும் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணை மேற்கொள்வதற்கு சந்தேகநபர்கள் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் கள்.
சம்பவம் தொடர்பில் மன்னார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM