தாய்ப்பால் புரைக்கேறியதால் 3 நாள் குழந்தை மரணம்

Published By: Raam

24 Nov, 2016 | 08:27 AM
image

(அப்துல் கையூம்)

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் தாய்ப்பால் புரைக்கேறியதால் 3 நாட்களேயான குழந்தை நேற்று மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை, ஆலையடி வீதியைச் சேர்ந்த தவசீலன் மற்றும் சுஜாந்தினி தம்பதிகளின் ஆண் குழந்தை ஜரூக்ஸன் (வயது 3 நாள்) என்ற குழந்தையே இவ்வாறு மரணத்தைத் தழுவியுள்ளது.

குழந்தை அழும்போது தாய் பால் அருந்தக் கொடுத்து பிள்ளையை படுக்கையில் போட்டுவிட்டு வீட்டு வேலைகள் முடிந்து வந்து பார்த்தபோது சற்று நேரத்தில் குழந்தை மரணித்து விட்டிருந்ததாக பெற்றோர் தெரிவித்தனர்.

கரடியனாறு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே. சுகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனையின் இடம்பெற்ற பின்னர் குழந்தையின் சடலம்  நல்லடக்கத்திற்காக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24