தமிழகத்தின் சென்னை நகரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் வழங்கியுள்ளார்.
செல்லானி ஜுவெலறி மார்ட் நிறுவனத்தின் உரிiமையாளரான ஜெயந்தி லால் சயந்தி, தனது ஊழியர்கள் குழுவொன்றுக்கு இப்பெறுமதியான பரிசுகளை வழங்கியுள்ளார்.
தனது ஊழியர்கள் 8 பேருக்கு கார்களையும் மேலும் 18 ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்களையும் அவர் வழங்கியுள்ளார்.
ஏ.என்.ஐ. செய்திச் சேவையிடம் அவர் இது தொடர்பாக கூறுகையில், தனது வெற்றிகளிலும் தோல்விகளிலும், மேற்படி ஊழியர்கள் குழுவினர் தனக்கு ஆதரவு அளித்தனர் எனவும், அவர்கள் தனது இரண்டாவது குடும்பத்தின் போன்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இப்பரிசுகள் வழங்கப்பட்டபோது ஊழியர்கள் சிலர் திடுக்கிட்டனர். சிலர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
“இப்பரிசுகள் அவரின் வேலையை உற்சாகப்படுத்துவதுடன், அவர்களின் வாழ்க்கையில் சில விசேடங்களை ஏற்படுத்தும். எனது வர்த்தக்தின் ஏற்றத் தாழ்வுகளின்போது அவர்கள் என்னடன் பணியாற்றி, லாபம் சம்பாதிப்பதற்கு எனக்கு உதவினர். பரிசுகளை வழங்கி வியப்படையச் செய்வதன் மூலம், அவர்களையும் எனது குடும்பத்தினரைப் போன்றே நடத்த விரும்புகிறேன். ஒவ்வொரு முதலாளியும் தனது ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்” என ஜெயந்தி லால் சயந்தி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM